என்னாது ப்ளாக் டைட்டில்லா.தெரிஞ்சா சொல்ல மாட்டோமா.
நானே நேரம் போகாம எதாச்சும் கதைன்னு கிறுக்கி இருப்பேன்.
படிக்கணும்ன்னு வந்துட்டீங்க கழுதய படிச்சிட்டு போங்க

Monday, November 1, 2010

பாலி பகுதி 2


வீட்ல என்னென்னமோ சொல்லி அனுமதி வாங்கிட்டு மெட்ராஸ் ட்ரெயின் ஏறிட்டேன். எப்போ ட்ரெயின், இல்ல பஸ் ஏறுனாலும் பக்கத்ல எதாச்சும் பிகர் உக்காருதானு பாத்துட்டே இருப்போமே. உக்காந்தா என்ன பண்ண போறனு தான கேக்கறீங்க. மச்சி பக்கத்ல சூப்பர் பிகர் டா, அப்டினு மெசேஜ் மட்டும் தான் அனுப்புவேன். மத்தபடி அந்த பொண்ண நிமிந்து கூட பாக்கமாட்டேன்( சத்யமா பாஸ்!!!).  பேட் லக், அன்னிக்கு யாரும் வரல. வெளிய பராக்கு பாத்துட்டே மெட்ராஸ் வந்தேன். நைட் 1 மணிக்கு பிளைட்.  பஸ் ஏறினாலே பீர் உட்டுட்டு தான் ஏறுவோம். ஏரோபிளேன்னா சும்மாவா?. 

"எத்தன மணிக்கு டா பிளைட்" அடுக்கி வெச்சிருந்த பீர் பாட்டில்ல பாத்துட்டே சுனில் கேட்டான்.
"நைட் ஒரு மணிக்குடா"
"டேய் மணி இப்போவே 10 டா. நீ சாப்ட வேணாமா? கெளம்புடா, ஆமா கோகுல், சுரேஷ் எப்டி வராங்க?"
"வினீத் என்ன ஏர்போர்ட் வந்து கூட்டிட்டு போவானாம். இவங்க ரெண்டு பேரும் நான் போன அப்பறம் நாளைக்கு சாயங்காலம் சிங்கப்பூர்ல இருந்து வருவாங்க"
"வினீத் ஏர்போர்ட் வரலைனா?"
"உன் நெனபுல கொல்லி வெக்க, அதெல்லாம் வந்திடுவான்"(உள்ள ஒதருச்சு)
" என்னமோ!!! கெளம்பு கெளம்பு, மணி ஆச்சு!" 

பாலி போக, சென்னைல இருந்து டைரக்ட் பிளேன் கெடையாது. சிங்கப்பூர் போய் போலாம் இல்ல, பாங்காக் போய் போலாம். கொஞ்சம் முன்னாடியே பிளான் பண்ணி புக் பண்ணா, சிங்கப்பூர் வழியா சீப் டிக்கெட் கெடைக்கும். இந்தோனேசியா போக விசா தேவ இல்ல. அங்க போய் எடுத்துக்கலாம்(on arrival visa).  முக்கியமா US டாலர் கொண்டு போங்க. நம்ம ஊர்ல இந்தோனேசியன் ருபயாஹ் கெடைக்காது. ஏர்போர்ட்லயே அவங்க காசு மாத்திக்கலாம். ஹோட்டல் எல்லாம் இங்க இருந்தே புக் பண்ணிட்டு போறது நல்லது. 

நான் பாங்காக் போய் அங்க இன்னொரு பிளேன் மாத்தி பாலி போனும். பிளேன்ல புரியாத மொழில பேசிட்டு இருந்தாங்க. அவங்க பேசற இங்கிலீஷ் கூட புரில. சென்னைல தான் இருக்கோமா, ஒன்னுமே புரில. காலைல அந்த ஊர் டைம் படி 6 மணிக்கு கொண்டு போய் விட்டுடாங்க. தூங்கியும் தூங்காமலும் போய் அடுத்த பிளேன் புடிச்சு பாலி போனேன். அந்த பிளேன்ல என்ன தவிர நம்ம ஊர் காரங்க இருக்க மாறியே தெரில.பாலி போன பிறகு செக்யூரிட்டில நோண்டி நோண்டி கேள்வி கேக்கும் போது தான் தெரிஞ்சது, நான் முழிச்ச முழி, நம்ம கலர் எல்லாம் சேந்து அவங்களுக்கு சந்தேகம் வந்திருக்கும். (என்ன பாத்தா போதை மருந்து கடத்துற மாறியா இருக்கு?). கடசில இது டம்மி பீஸ்னு தெரிஞ்சு விட்டுடாங்க. 

நல்ல வேலை, வினீத் வெளிய வந்திருந்தான். டிரைவர்னு ஒருத்தன காமிச்சான். அவன் வணக்கம் வெச்சத பாத்து மெரண்டு போய்ட்டேன்.

"என்ன மச்சி, உட்டா கால்ல விழுந்திருவான் போல?, நமக்கு இப்டி ஒரு வரவேற்ப்பா?"
"இந்த ஊர்ல இப்டி தான் டா, சரி நம்ம ஹோட்டல் போலாம், அங்க நீ கொஞ்சம் தூங்கு, அப்பறம் நைட் 7 மணிக்கு அவங்க வந்திருவாங்க, இன்னைக்கு சரக்கு போட்டுட்டு தூங்கிடலாம், நாளைக்கு வெளிய போலாம், ஓகே வா?" (ஓப்பனிங் எல்லாம் நல்லா தான் இருக்கு).

அது ஹோட்டல் இல்லேங்க, தனி வீடு. வேலைக்கு ஆள், நீச்சல் குளம் எல்லாம் இருந்தது. கூடவே மொக்கை ஒருத்தன் இருந்தான்.அட நான் இல்லேங்க, அந்த வீட்டு சொந்தக்காரன். மொக்கை போட்டான் பாருங்க, ஐயோ ஐயோ, ரத்தமே வந்திருச்சு. அவன் காதல் கதை எல்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டான். அவன் கிட்ட இருந்து கழண்டு தூங்க போகறகுள்ள போதும் போதும்னு ஆய்டுச்சு. 

சாயங்காலம் எந்திருச்சு, அவங்கள போய் கூட்டிட்டு, சரக்கு வாங்கிட்டு வந்தோம். குடிச்சிட்டே, குளிச்சிட்டு..... குளிச்சிட்டே, குடிச்சிட்டு சூப்பர்ரா இருந்தது. நல்லா ஆட்டம் போட்டுட்டு படுத்தோம். 

அடுத்த நாள், என் வாழ்க்கைல மறக்க முடியாத நாள். உயிர் போய் உயிர் வந்த நாள். எப்டினு சொல்றேன்.

4 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

அடுத்த நாள், என் வாழ்க்கைல மறக்க முடியாத நாள். உயிர் போய் உயிர் வந்த நாள். எப்டினு சொல்றேன்.

//

சீக்கிரம் சொல்லுங்க நண்பா....

Arun Prasath said...

@ வெறும்பய : சொல்லிடலாம் தல, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.... நாளைக்கு வரைக்கும்....

அருண் பிரசாத் said...

தொடருங்க....

Arun Prasath said...

@ அருண் பிரசாத் : நிச்சயமா தல..... waities