என்னாது ப்ளாக் டைட்டில்லா.தெரிஞ்சா சொல்ல மாட்டோமா.
நானே நேரம் போகாம எதாச்சும் கதைன்னு கிறுக்கி இருப்பேன்.
படிக்கணும்ன்னு வந்துட்டீங்க கழுதய படிச்சிட்டு போங்க

Sunday, October 24, 2010

கல்லூரி அனுபவங்கள் பகுதி 3

"என்னடா ஆச்சு? எல்லாரும் இப்டி கப்பல் கவுந்த மாறி உக்காந்துட்டு இருக்கீங்க?" பெட்டிய கீழ வெச்சுட்டே கேட்டேன், எல்லாரும் ஏதோ சீரியஸ்யா  பேசிட்டு இருந்தத நிறுத்தீட்டு என்ன பாத்தாங்க. "நீ ஏன்டா இப்போ வந்த?" (என்ன ஒரு வரவேற்பு?) எப்பவும் திங்ககிழமை காலைல தான வருவ?" கேட்டது விஜய். கேட்ட போது அவன் என்ன ஏதோ பாவமா பாத்தான். என்னடா ஆச்சுனு கேட்டேன். அந்த விசயத்த அவன் யோசிச்சு சொல்றக்குள்ள விஜய்ய பத்தி பாத்துடலாம்.

இவனும் நானும் 4 வருசமா கிளாஸ்ல பக்கத்துல தான் உக்காந்திருந்தோம். இவனுக்கு கோவம் வந்ததுன்னா என்ன பண்ணரானே தெரியாது. எதிரி இவன அடிக்க, இவன எதிரி அடிக்க ஒரே பிரசன்ன தான் போங்க. சும்மா ஒரு வார்த்தை அழகுக்கு தான் சொன்னேன் சண்டனு வந்துருச்சுன்னா சும்மா பொரட்டி பொரட்டி  எடுத்திருவான். நான் வேற ரொம்ப சாதுவா!! இவன் அடிக்கறத பாத்து எனக்கு பாவமா இருக்கும். இவனுக்கு அடிக்கடி கோவம் வரும், ஆனா பாசக்கார பையன். எப்பவும் பசங்க தம் அடிப்பாங்கன்னு  தொவைக்க போட்ட சட்ட ஜோப்ல மினிமம் 10  ரூபா இருக்கும். கொஞ்சம் லக் இருந்தா 100 ,500 கூட கெடைக்கும். அவ்ளோ மறதி பையனுக்கு. சொந்த ஊர் கரூர் பரமத்தி.

"நீ திங்ககிழமை தான் வருவனு உன்ன போட்டு குடுத்துட்டோம்டா"
"என்ன மச்சி சொல்ற என்ன விஷயம்?"
மேட்டர் கொஞ்சம் சீரியஸ், பய புள்ளைங்க சீப்பா கெடைக்குதுனு அப்போ ரிலீஸ் ஆனா ஒரு படத்தோட CDய  ஹாஸ்டல் டிவில போட்டு பாத்துட்டு இருந்திருக்காங்க ( என்ன ஒரு தைரியம்). அது கூட பரவால்லீங்க, வார்டன் வந்து பக்கதுல நிக்கறது கூட தெரியாம சீரியஸ்யா பாத்துட்டு இருந்திருக்காங்க. அப்டியே கொத்தோட அமுக்கிட்டு போய்ட்டாரு. எங்க ரூம் பசங்க எல்லாருக்கும் என்குயரி வார்டன் ரூம்ல. வார்டன் வேற எங்க EEE வாத்தியார். வார்டனுக்கும்  பசங்களுக்கும் நடந்த உரையாடல்......

"யாருடா வயர்ர சொருகுனது?"
"நான் தான் சார்!" இது பிரகாஷ் (இவன பத்தி அப்பறம்).
"யாருடா டிவிய போட்டது?", "யாருடா எல்லாருக்கும் சொன்னது?" "யாருடா CD பிளேயர்ய ON பண்ணது?" இப்டி சரமாரியா கேள்வி மேல கேள்வி கேட்டு பசங்கள நிலைகுலைய வெச்சிருக்காரு.
"சரி யாருடா CD வாங்கிட்டு வந்தது?" (ஏன் உங்களுக்கும் வேணுமா?)

"அருண் சார்" இத அவன் சொன்னபோது என் நெலமைய யோசிச்சு பாருங்க, நொங்கு தின்னது ஒருத்தன், மாட்டிகிட்டது நானு.

"யாருடா அவன்? கூட்டிட்டு வா அவன"
"சார் அவன் கோயம்புத்தூர் போயிருக்கான் சார், திங்ககிழமை தான் வருவான்" (அதனால தான என் பேர போட்டு குடுத்திருக்காணுங்க).
இப்போ தானடா வீட்ல இருந்து வந்தேன், அதுக்குள்ள மறுபடியும் தொரத்தி விட்டுடுவாங்கலோ?,  
"அதெல்லாம் சரிடா, வீட்டுக்கு கால் பண்ணி சொல்லிருக்கலாம்ல" ( அப்போ ஏது செல்போன் ). "யார் கிட்டயும் நம்பர் இல்லடா, நீ கோயம்புத்தூர் போய்ட்டனு சொன்னதும், நாளைக்கு விசாரிச்சுக்கலாம் அப்டினு சொல்லிடாரு, நீ என்னடானா இப்போவே வந்து நிக்கற, அதுக்குள்ள எதாச்சும் ஐடியா பண்ணலாம்னு நெனச்சு பேசிட்டு இருந்தோம்,  சரி நாளைக்கு நைட் வரைக்கும் அவர் கண்ல பட்டுடாத""
என்ன கொடுமை சரவணன் சார் இது"
  
"டேய் மாப்ள உங்க ரூம் பசங்கள வார்டன் கூப்டாரு டா" பக்கத்துக்கு ரூம் பையன் வந்து சொன்னது தான் தெரியும். நான் கட்டிலுக்கு அடில போய்டேன், மறுபடியும் வெளிய வந்து," மச்சி இந்த பிரச்சன முடிஞ்சதும் கண்டிப்பா ரூம்ம சுத்தம் பண்ணிடுவோம்டா, அடில நாத்தம் தாங்கல, இது மாறி டைம்ல ஒளிய எடம் வேணும்ல" சொன்னதும் எல்லாரும் சிரிச்சிட்டானுங்க. "ஆமாடா இந்த வாழ்வா சாவா டைம்லும் உனக்கு காமெடி கேக்குதாடா, மூடிட்டு படு, இல்லனா கட்டில்கு மேல கூட படுக்க முடியாது".

அவங்க திரும்பி வர்றவரைக்கும் லப் டப் னு அடிச்சிட்டு இருந்தது,  அவுங்க வரும் போது சிரிசிட்டே வந்தாங்க, அப்போ தான் எனக்கு உயிரே வந்ததுனு சொல்லி தெரிய வேண்டியது இல்ல. "என்ன மச்சி சல்ப்பியா?", "ஆமாடா, ஒரு மன்னிப்பு கடிதம் (apology letter) எழுதி குடுத்துட்டு போ சொல்லிட்டாரு" "அப்பாடி தப்பிச்சோம், லெட்டர் தான"னு எழுதிட்டு இருந்தாங்க. 

அப்போ தெரியாது, இந்த லெட்டர் தான் பல லெட்டர்க்கு முன்னோடினு.

தொடரும்....

13 comments:

sunil said...

inda thodar kathai la pala pasanga maanam kappal eerum pola...

Unknown said...

super da nanba..nyc narration..was jus laughing throut wen iwas readin ths post..etho nethu nadantha mathiri iruku,...ella incidentsum enum kanukulaya iruku da..super continue pannu da...i hav one suggestion also...will tell wen i cl u tmrw

Unknown said...

@Sunil,,, machi nee dhan indha part 3 illaey appuram yean ippadi bayandhukara?

Arun Prasath said...

@ Sunil : கவலை படாத நண்பா, பாத்து எழுதறேன்

Arun Prasath said...

@ Raghu : எல்லாம் உன் ஆசிர்வாதம் தான் :)
@ Mithra : நண்பன ஓட்ட கூடாது

Unknown said...

@Arun.. enna romba suniluku support pandre? mmmmm enna nadakuthu????
@Sunil ... sunilu ini un matter dhan elutha poran adhuku dhan ippadi ellam unna defend pandra maari pandran... so ippovey arun a edhum mirati vetchuko machi...

Arun Prasath said...

@ Mithra : நண்பனுக்கு நான் சப்போர்ட் பண்ணாம யார் பண்ணுவா?

rockarthik said...

machi..adhu endha padam dvd da? :-)

Arun Prasath said...

@ rockarthik : DVD இல்லடா CD .. அத சொல்ல முடிஞ்சா மொதல்லயே சொல்லிருக்க மாட்டேனா...

Prasanna said...

what about next part boss?

Arun Prasath said...

@ Prasanna : சீக்கரமே எழுதறேன் தல!

செழியன் said...

கம்பஸ் அனுபவங்கள் காலமெல்லாம் மறக்க முடியாது!

Arun Prasath said...

கரெக்ட்டா சொன்னீங்க செழியன் :)