என்னாது ப்ளாக் டைட்டில்லா.தெரிஞ்சா சொல்ல மாட்டோமா.
நானே நேரம் போகாம எதாச்சும் கதைன்னு கிறுக்கி இருப்பேன்.
படிக்கணும்ன்னு வந்துட்டீங்க கழுதய படிச்சிட்டு போங்க
Showing posts with label தொடர் பதிவு. Show all posts
Showing posts with label தொடர் பதிவு. Show all posts

Tuesday, January 11, 2011

2010 - சில சந்தோசங்கள்

எல்லாரும் திரும்பி பாக்கிறேன்னு எழுதினாங்க. ஆனா நான் திரும்பி பாத்தா ஜன்னல் தான் தெரிஞ்சது. ஹி ஹி அதனால தான் டாபிக் மாத்திட்டேன். இந்த தொடர் பதிவு எழுத அழைத்த அன்பு, பாசம், வீரம், பொறுமை, அழகு எல்லாம் நிறைந்த அருண் அவர்கள் ( ஹி ஹி, நம்ம பேரு இவருக்கு இருக்கறதுல எவ்ளோ நன்மை இருக்கு பாருங்க) வாழ்க. ஒன்னும் பெருசா படிப்பினயோ, வாழ்க்கை பாடத்தையோ கத்து குடுகலங்க இந்த 2010 . ஆனா அலுங்காம வந்து கஷ்டத்த கூட தராம போய்டுச்சு. அதானங்க ரொம்ப முக்கியம். 

நான் ப்ளாக் ஆரம்பிச்ச வருஷம், வேலை கெடச்ச வருஷம்ன்னு அருண் அண்ணன் மொக்க போட்ட மாறி நான் போட விரும்பல (யாராச்சும் உண்மைய சொல்லணும்ல). அதனால நான் ரசிச்ச சில நேரங்கள், மனிதர்கள்  பத்தி சொல்றேன். ( வாடா, நெனச்சேன்... ரெண்டு மூணு பொம்பள புள்ளைங்க பேரு வருமே, அத சொல்லாட்டி தூக்கம் வராதுல ).

ரொம்ப முக்கியமான நிமிடம் - தல சச்சின் 200 * அடிச்ச நிமிடம்

ஆபீஸ்ல இருந்த நேரத்த வெறுத்த நிமிடம். தல ஆடின அழக பாக்க முடியலேன்னு தான். ஆனா ஆபீஸ் சீட் நுனில உக்காந்திருந்தேன். அடிச்சதும் செம சந்தோசம். சுத்தி இருந்த வெள்ள காரன் எல்லாம் ஒரு மாறி பாக்கறான். அதுவாங்க முக்கியம், தல சரித்திரம் படைச்சு இருக்கு, இவனுங்க கெட
க்கறாங்க.
ஹி ஹி ஆனா  இன்னும் ஒரு 50 அடிச்சு 250 * போட்ருந்தா நல்லா தான் இருக்கும் இல்ல. இன்னும் 10 வருஷம் ஆடுங்க தல. எவன் என்ன சொல்றான்னு பாக்கலாம்.
இப்படிக்கு நீங்க அவுட் ஆனதும் டிவி சேனல் மாற்றுவோர் சங்கம்.

கமான் வெல்த் தங்கங்கள்

ஆஸ்திரேலியாக்கு பின்னாடி இரண்டாம் இடம் கெடச்சது பெரிய சந்தோசம் பாருங்க. இந்த இங்கிலீஷ்காரங்க, அதாங்க இங்கிலாந்து பயபுள்ளைங்க 3 வது இடம். ஹப்பா என்ன சந்தோசம். அப்டியே ஒலிம்பிக்ல ஒரு 10 , 15 வாங்குங்கப்பா. இதான் ஒவ்வொரு இந்தியனின் கனவு. 
  

ரொம்ப வருஷம் கழிச்சு ரசிச்சு பாத்த படம் - விண்ணை தாண்டி வருவாயா

ஒரு காதல் கதைய இதுக்கு மேல அழகா எவனாலயும் சொல்ல முடியாது, இது என் கருத்து. கூடவே தல மியூசிக் வேற. கேக்கணுமா. அணு அணுவா ரசிச்சு பாத்தேன். 

"இப்போ என்ன சொல்ல வர ஜெஸ்ஸி"
"எனக்கு உன்ன பிடிச்சிருக்கு கார்த்திக், ஆனா இது எனக்கு வேணாம், புரியுதா, புரியுதாடா"
ஹம்ம், நீங்க சொல்றது எல்லாம் புரிஞ்சா தான் ஆம்பளைங்க பாதி பேரு லூசு ஆகாம இருப்பாங்களே. 

அப்பறம் மன்னிப்பாயா பாட்டு, இப்போ கேட்டாலும் ஒரு சிலிர்ப்பு, யப்பா என்ன வரிகள் ஒவ்வொன்னும். 
"மேலும் மேலும் உருகி உருகி, உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்" கிளாஸ்... வேற என்ன சொல்ல. லவ் பண்ணா இப்டி உருகி உருகி பண்ணனும். என்ன சொல்றீங்க?

ரசித்த பெண்கள் ( வா வா, இதுக்கு தான் வைடிங்)
சமந்தா ருத் பிரபு


"நந்தினி ஹீரோயின் நீ தான், ஒத்துக்க மாட்டன்னு தெரியும். டிரஸ்ட் மீ, நீ தான் பண்ணனும்"
விண்ணைத்தாண்டி வருவாயால சிம்பு கேப்பாரு, சமந்தா கிட்ட, அப்போ ஒரு சிணுங்கல் சிணுங்கி, 
"ஹே, யாரு கிட்ட கேக்கணும் சொல்லு" அப்டின்னு சொல்வாங்க பாருங்க, அப்போ முடிவு பண்ணோம் அடுத்த மன்றம் சமந்தாவுக்கே அப்டினு. ஹி ஹி ஆமாங்க என்ன மாறியே இன்னும் கொஞ்சம் பேரு சுத்தீட்டு இருக்காங்க மெட்ராஸ்ல. ரசிச்ச பண்களின் டாப் இவங்க தான்.

சாய்னா நெக்வால்


நல்ல திறமைங்க அக்கா கிட்ட, சாரி தங்கச்சி கிட்ட. ஆனா இவங்கள அக்கான்னு பெருமையா சொல்லலாம். நாம எல்லாம் பொட்டி தட்டிட்டு இருக்கோம், இவங்க பாருங்க கமான் வெல்த்ல தங்கம், ஹாங் காங்ல தங்கம். தங்க மங்கை. கலக்கிட்டு இருக்காங்க.  ஒலிம்பிக்ல அடுத்த தடவ மெடல் வாங்கிடுங்க அக்கா. ப்ளீஸ்.
 
இன்னும் இருக்காங்க, இதுக்கு மேல சொன்னா அடி தான் விழும். அதனால என் உரையை, அதாவது பதிவை முடிக்கிறேன்.

அரசியல் நிமிடங்கள், இன்னும் பல பல சொல்லிட்டே போலாம், ஆனா இப்போ போட்டு இருக்கறது தான் டாப் ஆப் தி லிஸ்ட். 

இது போக என் வாழ்க்கைல சொல்ற மாறி ஒன்னும் நடக்கலங்க, உங்கள போலவே நானும் 115 கோடில ஒருத்தன். அவ்ளோ தான். 

தொடர் பதிவுனா, யாரச்சையும் தொடர சொல்லணும்ல. நம்ம பங்காளி முறைமாமன் கார்த்திக் தான் அடி வாங்கிய தருணங்களை நம்முடன் பகிர்ந்து கொள்வார். வாங்க பங்காளி.

படங்கள் நன்றி -Galata.com 

Friday, January 7, 2011

எனக்கு பிடித்த 10 பெண்குரல் பாடல்கள் - தொடர் பதிவு

 எனக்கு பிடித்த 10 பெண் குரல் பாடல்கள் பத்தி எழுத சுபத்ரா பேசுகிறேன் சுபத்ரா அழைத்து (மிரட்டி) இருந்தாங்க. ( அவங்க மட்டும் பேசவேண்டியது தான, நம்ம வேற பேச சொல்லிட்டு ). நமக்கு பிடித்த 10 பெண்கள்ன்னா இஷ்டத்துக்கு 10 பதிவு எழுதலாம். ஆனா இவங்க பாடிய பாட்டு மட்டும் தான் எழுதனுமாம். என்ன கொடுமை சரவணன் இது. அதனால் எனக்கு பிடித்த நடிகைகள் பாடிய (வாயசைத்த) பாடல்கள் சிலத சொல்றேன்.

காலேஜ் டைம்ல ஜோ வோட ரசிகன் நான். மன்றம் எல்லாம் வெச்சிருந்தேன் ஹி ஹி. அதனால மொதல் மூணு பாடல்கள் அவங்களுக்கே. தமிழில் வாலியில் அறிமுகமாகி இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்டவர் (அப்போ நான் பாப்பா :) ). இப்போ நடிகாதனால கொஞ்சம் வருத்தம்.

1 . காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்....
படம் - பூவெல்லாம் உன் வாசம்
வரிகள் - வைரமுத்து 
இசை - வித்யாசாகர் 
பாடியவர் - சாதனா சர்கம் (இவங்க எனக்கு பிடித்த பாடகி.. யப்பா என்ன குரல்..)
பிடித்த லைன் - புத்தகம் மூடிய மயிலிறகாக புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை. ( தெரியவே தெரியாது, தெரிஞ்சாதான் உசார் ஆகிடலாமே)

2 . மன்மதனே நீ கலைஞன் தான்...
படம் - மன்மதன் 
வரிகள் - சிநேகன் 
இசை - யுவன் 
பாடியவர் - மறுபடியும் சாதனா சர்கம்
பிடித்த லைன் -  அடிமை சாசனம் எழுதி தருகிறேன், என்னை ஏற்று கொள் (கொல்?)

3 . ஒன்றா ரெண்டா ஆசைகள்..
படம் - காக்க காக்க (இன்னொரு ரொம்ப புடிச்ச பாட்டு உயிரின் உயிரே...., ஆல் டைம்)
வரிகள் - தாமரை ( இவங்க தான்னு நெனைக்கறேன்)
இசை - ஹாரிஸ்
பாடியவர் - பாம்பே ஜெயஸ்ரீ (!)
பிடித்த லைன் - கண்களை நேராய் பார்த்து பேசும் உன் இனிய கண்ணியம் பிடிக்குதே ( அடடா அக்காவுக்கு என்ன அறிவு )


அடுத்து கன்னடத்து குயில் (பைங்கிளி தான் சொல்லிட்டாங்களே) திவ்யா ஸ்பந்தனா, அதாங்க நம்ம குத்து ரம்யா. பொல்லாதவன்ல மயங்கினேன், வாரணம் ஆயிரம்ல ரசித்தேன். மன்றம் சென்னைல இயங்கிட்டு இருக்கு 

4 . அனல் மேலே பனித்துளி...
படம் - வாரணம் ஆயிரம் 
வரிகள் - தாமரை 
இசை - ஹாரிஸ் 
பாடியவர் - சுதா ரகுநாதன்
பிடித்த லைன் - உனது இரு விழி தடவியதால் அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே (அப்பறம் அடி விழுந்திருக்கும்)

5 . நிபுனா நிபுனா என் நிபுனா
படம் - குத்து 
வரிகள் - சத்யமா தெரில 
இசை - ஸ்ரீகாந்த் தேவா 
பாடியவர் - மறுபடியும்,மறுபடியும் சாதனா சர்கம்
பிடித்த லைன் -உன்னை முதல் முறை முதல் முறை பார்த்தேன், 
நீயும் எனகென பிறந்ததை உணர்ந்தேன். (இன்னும் எத்தன நாளைக்கு இதே டயலாக் இருக்குமோ?)


யப்பா இப்போ தான் 5 முடிஞ்சிருக்கா? இன்னும் பாதி தூரம் இருக்கு போலயே.. 
ஹுஸ் அப்பா,முடியல... தொடர் பதிவு ஆரம்பித்து எல்லாரையும் டரியல் ஆக்கும் அருண் அண்ணன் ஒழிக..

அடுத்து க்யூட் பொண்ணு சமந்தா ருத் பிரபு. நம்ம பாணா காத்தாடில நடிசாப்ல.. செம க்யூட் இல்லங்க? தற்போது அதிகம் சைட் அடிக்க பட்டு கொண்டு இருப்பவர்.  மன்றம் வேலை நடந்துட்டு இருக்கு.

6 .  என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது...
படம் - பாணா காத்தாடி 
வரிகள் - நா. முத்துக்குமார்
இசை - யுவன் 
பாடியவர் - மறுபடியும்,மறுபடியும் மறுபடியும் சாதனா சர்கம் ( ஹி ஹி )
பிடித்த லைன் - என்ன அதை இதயம் கேட்டது.... காதல் என உயிரும் சொன்னது அன்பே... ( சொல்லும் சொல்லும், அப்பறம் கொல்லும் கொல்லும்)


மாஸ்கோவின் காவிரில இருந்து பாட்டு போடமுடிலன்னு வருத்தம் தான்...என்ன பண்ண...

அடுத்து நான் குழந்தையா இருகச்சே பிடித்த நடிகை ரேவதி அக்கா. அவங்களுக்காக ரெண்டு பாட்டு.

7 . நேற்று இல்லாத மாற்றம்..
படம் - புதிய முகம் 
வரிகள் - வைரமுத்து 
இசை - இசைப்புயல்  
பாடியவர் - சுஜாதா 
பிடித்த லைன் - இதுதான் காதல் என்பதா,இளமை பொங்கி விட்டதா  இதயம் சிந்தி விட்டதா  (எந்த சொல்ல, எல்லாம் விதி.. அனுபவி)
 
 8. வான் மேகம், பூ பூவாய் தூவும்.
படம் - புன்னகை மன்னன்
இசை -  இசைஞானி
இந்த படத்ல ரொம்ப பிடிச்ச பாட்டு இது இல்ல, அதுக்காக இசைஞானி பாட்ட விட முடியுமா? அதுக்காக தான் இந்த பாட்டு.

அப்பறம் எல்லாத்தும் சொல்லிட்டு தல இசைல பாட்டு சொல்லனா அப்பறம் என்ன ரசிகன் நான்? அதுக்காக ரெண்டு பாட்டு.

9 .  மருதாணி மருதாணி
படம் - சக்கரகட்டி 
இசை - இசைப்புயல்
வரிகள் - நா.முத்துக்குமார் 
பாடியவர் - மதுஸ்ரீ
பிடிச்ச லைன் - காதலி கை நகம் எல்லாம், பொக்கிஷம் போலே அவன்  சேமிப்பான் ( ஹி ஹி என்னத்த சொல்ல, நல்லா இரு )



10 . தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை.
படம் - மிஸ்டர். ரோமியோ 
இசை - இசைப்புயல் 
வரிகள் - வைரமுத்து 
பாடியவர் - சங்கீதா
பிடிச்ச லைன் - தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை.. (இப்போ தான் ரொம்ப சரியா சொல்லிருக்காறு)

அப்பறம் அனுஷ்கா ஷெட்டி ரொம்ப புடிக்கும். அவங்க பாட்டு தான் போட முடில, (எதுவும் இல்ல). ஒரு படம் ஆச்சும் போடறேன்.
 

அப்பாடி முடிச்சிட்டேன். எல்லாரும் பிடிச்ச பாடல்கள் தான எழுத சொல்றாங்க. எனக்கு பிடிக்காத 10 பாடல்கள் பத்தி எழுத நம்ம அருண் அண்ணனை அழைக்கிறேன் (நாங்க வித்யாசமா யோசிப்போம்). அவர் எழுதாட்டி, அவர் கூட ஆறும் பேச கூடாது, ஆறும் பழக கூடாது, ஆறும் அன்னம், தண்ணி பொழங்க கூடாது, ஆறும் அவர் ப்ளாக் பக்கம் போக கூடாது. இது சொம்போட இருக்கற நாட்டாமை பன்னிக்குட்டி அண்ணன் சொன்ன தீர்ப்பு.

படங்கள் நன்றி - India Glitz
                                  Kollywood today